நீலகிரி மலைரயிலின் சேவை நாளை ரத்து

நீலகிரி : கனமழையின் காரணமாக மரம் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததால் நீலகிரி மலைரயிலின் சேவை நாளை (அக்.,17) ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி : கனமழையின் காரணமாக மரம் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததால் நீலகிரி மலைரயிலின் சேவை நாளை (அக்.,17) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக கேத்தி மற்றும் லவ்டேல் இடையிலான உதகை மலை ரயில் தண்டாவளத்தின் குறுக்கே மரம் விழுந்துள்ளது. இதனால், ரயிலின் சேவை நாளை (அக்.,17) ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter