சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு

சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டிகோவின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியில் இருந்து 192 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் சாண்டியகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அதேபோல் நாட்டின் பல்வேறு பதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று சிலி நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியதில் சிலியில் 500 பேர் பலியாகினர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

Newsletter

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றà¯...

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...