கோவையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!


ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூறி போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று போராட்டத்தை கைவிடுமாறு கூறிவந்த காவல்துறையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். 

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்களத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்களோ அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டின் மீது இருக்கும் தடை முற்றிலுமாக நீக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தனர். 

இதையடுத்து, போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால் போராட்ட களத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் தடியடி மேற்கொண்டனர். பின்பு, சற்று நேரத்தில் போராட்டக்காரர்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...