வ.உ.சி அடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் களமிறங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை இன்று காவல் துறையினர் திடீரென தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் இந்த கொடூரமான தாக்குதலால் தமிழகம் முழுவதும் தற்போது போர்க்களமாக காட்சியளித்து வருகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஒருவார காலமாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்களை விரட்டும் முயற்சியில் இன்று காலை காவல்துறையினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



இதனால், சிதறியோடிய இளைஞர்களும், மாணவர்களும் கோவையின் முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.









மேலும், தங்களுடைய அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து எங்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தும் காவல்துறையை கண்டிப்பதாக தெரிவித்த இளைஞர்கள் பேருந்துநிலையத்தில் இருந்த ஒரு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தற்போது அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இதனால்,காந்திபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...