கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி


கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாணவர்களின் அறப்போராட்டம் நேற்று வன்முறையில் முடிந்தது.  போலீசார் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான தவறான தகவல்கள் மாணவர்களை சென்றடைந்தது. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்று ஆராயாமல், அதை பலருக்கு அவர்கள் பகிர்ந்தனர். இதன் மூலம் தேச விரோத கொள்கைகள் விரைவாக பரப்பப்பட்டது. 

கோவையில் சுமார் 20 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், 3 ஆயிரம் போலீசார் தான் உள்ளனர். இந்த பெரிய மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநகரின் பல இடங்களில் 4 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் சில ஊடகங்கள் ஒரு சம்பவத்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி இளைஞர்கள் மத்தியில் போர்க்குணத்தை உருவாக்குகிறது. தொடர்ந்து உருவாகும் போரட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்தவில்லை என்ற கருத்தையும் ஊடகங்கள் முன் வைக்கின்றன. இதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் நடத்திய போராட்டாத்தில் சில விஷமிகள் புகுந்தனர். அவர்கள் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடம் புகுத்த முயற்சி செய்தனர். இது தொடர்பான வீடியோ ஆதரங்கள் மற்றும் புகைப்படங்கள் காவல்துறை வசம் உள்ளது. விரைவில் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .

நேற்று கோவையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க வேண்டிய சூழல் உருவானது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கெதுவும் பதியாமல் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர். காந்திபுரம் பகுதியில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போராட்டகளத்தில் புகுந்த விஷமிகளின் தொடர்பை மாணவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும். இதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து, ரேக்ளா பந்தையத்தின் மீது தடை இருந்த போதும் கொடிசியா வளாகத்தில் அதை அனுமதித்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விசாரிப்பதாக கூறிய காவல் ஆணையர் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...