ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் மற்றும் நியூயார்க்கின் கண்காடியா கல்விக் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துவக்கம்


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தைச் சார்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் கண்காடியா கல்லூரியிடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.



ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் கண்காடியா கல்லூரியின் நிர்வாகத் துணைத் தலைவர் முனைவர் ஜேம்ஸ் கிரிஸ்டியன் பர்க்கி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்களை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று மீதமுள்ள ஒரு வருடத்தினை அமெரிக்காவில் உள்ள கண்காடியா கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று பயில்வார்கள்.

முழுமையான வருடங்களை முடித்த பின்னர் இம்மாணவர்கள் மேலும் ஒரு வருடம் அமெரிக்காவில் இதே கல்லூரியில் முதுகலை மேலாண்மை பட்டத்தினை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்விகள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்ச்சியில், இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...