ஏசிசி வித்யாசாரதி கல்வி உதவித் தொகை திட்டத்தினை கோவை மாநகராட்சி ஆணையர் இன்று துவக்கி வைத்தார்


வித்யாசாரதி தனது ஆலைமட்ட முயற்சியாக ஏசிசி மதுக்கரை சிமெண்ட் ஆலையானது "ஏசிசி வித்யாசாரதி கல்வி உதவித்தொகைத் திட்டம்" என்னும் திட்டத்தினை துவங்கியது.



ஏசிசி மதுக்கரை சிமெண்ட் ஆலை இயக்குநர் கே.வம்சிதர் ரெட்டி, டி.என்.கோபகுமார், முதன்மை மேலாளர் வினித் ஏ.நாயர் மற்றும் இணை மேலாளர் எம்எஸ்டிஎல் ஆகியோர் முன்னிலையில் கோவையில் நடைபெற்ற இதன் துவக்கி நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்தத் தொழில்நுட்ப கல்வி உதவியானது கோவை மாநகராட்சியின் சமூக முயற்சியினை ஒத்து இ-கெவர்னன்ஸ் இன்ஃப்ரராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் எஜுதர்மா அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.



இதுகுறித்து துவக்க விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், இருபது லட்ச ரூபாய் அளவிலான இந்த கல்வி உபகராத் தொகையானது கோவையின் பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த நூறு மாணவர்களுக்கு நேரடியாக பலனளிக்கும்.

நிறுவன மற்றும் கல்வித் துறைகளின் கல்விசார் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே இந்த உதவித் தொகையின் இந்த உதவித்தொகையின் உத்தேசம் ஆகும். கல்வி உதவித் தொகை படிவங்களை சமர்ப்பித்தல், சரிபார்த்தல், நிதி விநியோகம் மற்றும் உதவித்தொகையினை புதுப்பித்தல் போன்ற அனைத்தும் கணினி வாயிலாக செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கான இந்த உதவித்தொகையால் அவர்களது வாழ்வாதாரமும், கல்வித் தரமும் மேம்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய கே.வம்சிதர் ரெட்டி கூறுகையில், ஏசிசி மதுக்கரை சிமெண்ட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிஎஸ்ஆர் ஊழியர்களுக்கான வாழ்வாதாரத்தை தரமாக மேம்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான பயிற்சியையும் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. 

பல நாடுகளில் அடிப்படை தெரிதல் கூட இன்றி பலர் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். எங்களது இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு உதவித் தொகைகளும், அவர்களின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தி வருகிறோம்.

இதன் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை 100 மாணவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, இளங்களை பட்டப்படிப்பு மாணவர்கள் 40 பேருக்கும், ஐடிஐ மாணவர்கள் 20, டிப்ளமோ மாணவர்கள் 30, தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் 12 பேருக்கும் வழங்கப்படவுள்ளது என்றார்.

இதற்கான விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனமானது முதலில் தன்னை இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவிற்குப் பிறகு வித்யாசாரதி குழு உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று மாணவர்கள் மத்தியில் இந்த உதவித் தொகையினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி கணினி வாயிலாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க உதவுவர்.

இதற்கான விண்ணப்பங்களை கணினி வாயிலாக 2017 ஜுன் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் மாணவர்களுக்கான உதவித் தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...