ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு


கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் இன்று தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது, அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே.ஜானட் தலைமையேற்று மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் குறித்து உறுதிமொழி உரையாற்றினார்.



அப்போது, இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஜனநாயத்தின் மரபுகள் மற்றும் கடமைகளை நிரைவேற்றுவது நமது பொறுப்பு. எவ்வித இலவசங்களையும் ஏற்று வாக்களிப்பது தவறு. ஒவ்வொரு தேர்தலிலும் இனம், மதம், சமுதாயம், மொழி உள்ளிட்டவற்றில் பாகுபாடின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், மாணவர்களிடையே அவர் உரையாற்றுகையில், வாக்காளர் பட்டியளில் தங்களது பெயர்கள் உள்ளனவா என்று மாணவர்கள் ஆய்வு செய்து தேர்தலில் முறையாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை, அதனை எக்காரணத்திற்காகவும் நாம் தவிர்க்கக் கூடாது. மக்கள் நூறு சதவிகித வாக்கினை உறுதிசெய்ய வேண்டும்.



அதற்கான முதற்படி படித்த இளைஞர்கள் முன் வந்து வாக்களிப்பதே ஆகும். மாணவர்களை பின்தொடர்ந்தே மக்களும் தங்களது வாக்கினை உறுதிசெய்வர். கல்வியறிவற்ற மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதேப்போன்று, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியிலும் அக்கல்லூரி முதல்வர் டாக்டர். பி. பாபாஞானகுமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...