அவிலா மேல்நிலை பள்ளி பொன் விழா ஆண்டை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக கல்வி பயன்பாட்டிற்கான மனித வடிவிலான இயந்திரமனிதன்


1967ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்ட அவிலா பள்ளியின் பொன் விழா வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவிலா பள்ளியின் நிர்வாகத்தினர் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் வீடு இல்லாத ஏழை பொதுமக்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டு அவர்களது மருத்துவ செலவை நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ செலவு மற்றும் திருமண உதவித் தொகையாக 5 லட்சமும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த 15 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டு பள்ளி கல்வி சேவையை கடந்து பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகள் செய்து வருவதாக கூறினர். 

மேலும், இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக மனித வடிவிலான இயந்திர மனிதன் கல்வி பயன்பாட்டிற்கு உபயோக்க உள்ளதாகவும் 28ம் தேதி அன்று பள்ளியில் இதன் செயல் முறை விளக்கம் அளிக்கபட உள்ளதாக கூறினர்.

விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப், உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளி கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், கோவை மாநகர ராமநாதபுரம் பகுதி மறைமாவட்டதின் ஆயர் பால் அலபாட், ஏடிஜிபி சைலேந்திரபாபு, மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...