கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு உலகமெங்கும் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையமானது சத்குரு தலைமையில் இயங்கி வருகிறது.
தற்போது, அவருக்கு மத்திய அரசின் சார்பில் சிறப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஈஷா அமைப்பிற்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், சூழலியல் உள்ளிட்டு பெரிய அளவிலான திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களின் ஈடுபாடு இதில் மிகவும் போற்றக்கூடியது.
நான், மனித சமுதாயத்திற்கு எவ்வித சுயநலமும் இன்றி வாழ்வை அர்ப்பணிப்பு செய்துள்ளேன்.
தற்போது மத்திய அரசு எனக்கு வழங்கும் பத்ம விபூஷன் விருதுக்கு என்றும் நான் அடிபணிந்திருப்பேன். இதன் மூலம் இன்னும் எனக்கோர் உத்வேகம் கிடைத்துள்ளது" என்றார்.