சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்


குடியரசு தினத்தை முன்னிட்டு நரேந்திரமோடியின் புகைப்படம் மற்றும் தேசியகொடி அச்சிடப்பட்ட  சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாட்டின் 68வது குடியரசுதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கோவையில் பல பகுதிகளில் குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுஇருந்தது, இந்த சுவரொட்டிகளில் பாரத பிரதமர்நரேந்திர மோடியில் புகைப்படம், தேசிய கொடியின் படம் உட்பட வாழ்த்து செய்தியும் அச்சிடப்பட்டிருந்தது, குனியமுத்தூர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உதயராஜ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியில் ஒட்டபட்டிருந்த போஸ்டர்களை நிலைய காவலர் சபீர் பாஷா ஆகியோர் கிழித்ததாக கூறி தேசிய கொடியை அவமதித்த அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...