அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் நேற்று அக்கல்வி நிறுவன வளாகத்தில் குடியரசு தினவிழா கடைபிடிக்கப்பட்டது.
விழாவின் தொடக்கமாக வேதியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.எஸ்.மோனிகா தேசிய மாணவர் படையின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அறிக்கையினை வாசித்தார்.
இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் உறுதிமொழி வாசிக்க பல்கலைக் கழகம் மற்றும் பள்ளி மாணவியர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேசபக்தி பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி நடனத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.