கடும் எதிர்ப்பால் கோவையில் பீட்டாவின் துணையான ஹெச்ஏஎஸ்-யின் சித்ரா இசை நிகழ்ச்சி ரத்து


கோவையில் பீட்டாவின் துணை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (ஹெச்ஏஎஸ்) சார்பில் நடைபெறவிருந்த பிரபல பாடகி சித்ரா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி மக்களின் கடும் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களுமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்தாலும் அதன் துணை அமைப்புகள் வெளிநாட்டு நிதியின் ஊக்கத்தால் அடங்க மறுத்து வருகின்றனர். தற்போது, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற பீட்டாவின் மற்றொரு துணையான ஹியூமன் அனிமல் சொசைட்டி கோவையில் வரும் 29-ந் தேதியன்று பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழ் மண்ணில் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தது அந்த அமைப்பு. இந்த நிகழ்ச்சிக்கு பாடகி சித்ராவும் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அப்பணத்தைக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு தொடர்வதற்கும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தகவல் வெளியிட்டனர்.

தமிழர்களிடம் இருந்து கட்டணமாக பணத்தைப்பெற்று அதில் தமிழக மக்களின் பாரம்பரிய அடையாளத்தையே அழிக்கும் இந்நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அலறிப் போன பீட்டாவின் குட்டி ஹுயுமன் அனிமல் சொசைட்டி தற்போது பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...