தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டாட்டம்



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 68-வது குடியரசு தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு.இராமசாமி, தேசியக் கொடியினை ஏற்றிவைத்து குடியரசு தின விழா உரையாற்றினார்.



அப்போது அவர் தனது உரையில், நாட்டினை ஒன்றிணைத்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய குடியரசாக்கிய இந்தியத் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களால் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைவருக்கும் உணவு அளிக்கும் நிலையடைந்தோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பினை சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் உலக அளவில் பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருப்பது நமக்கு பெருமை சேர்ப்பதாகும் குறிப்பிட்டார். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு விருதுகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் கடுமையான உழைப்பபின் வெகுமதி என நினைவு கூர்ந்தார்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்காக நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களோடு தேசிய மாணவர் அதிகாரிகள் செல்லமுத்து மற்றும் மனோன்மணி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள், பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...