வால்பாறையில் அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு வழங்கி 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

வால்பாறையில் நமது இந்திய தேசத்தின் 68-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். 

இதே போல் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோமதி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வால்பாறை நகராட்சி ஆணையர் சம்பத்குமார் வால்பாறை நகராட்சி வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். 



வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வள்ளிக்கண்ணு தேசிய கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று இந்திய தேசத்திற்கு மரியாதை செலுத்தினர். 

வால்பாறை ஸ்டேன்மோர் பிரிவு பகுதியில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குசலவன் தேசிய கொடியேற்றி வைத்தார். 

இதில் முன்னாள் நகர தலைவர் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...