வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவில் 5 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 



இதில் அங்கு உம்மர் என்பவர் நடத்தி வந்த டீக்கடையை உடைத்த யானைகள் கடையில் இருந்த மாவுப் பொருட்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சேதப்படுத்தியது. கடையின் கட்டிடமும் சேதமடைந்தது. 

இதே போல் அருகில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளி அன்புச் செழியன் என்பவரது வீட்டின் ஓடுகளையும் காட்டு யானைகள் உடைத்தது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தையும் உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்தனர். 

தொடர்ந்து பல எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. 

எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகள் முகாமிட்டுள்ள பகுதியை கண்டறிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினால் பொருட்சேதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சேதத்தையும் தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...