வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவில் 5 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இதில் அங்கு உம்மர் என்பவர் நடத்தி வந்த டீக்கடையை உடைத்த யானைகள் கடையில் இருந்த மாவுப் பொருட்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சேதப்படுத்தியது. கடையின் கட்டிடமும் சேதமடைந்தது.
இதே போல் அருகில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளி அன்புச் செழியன் என்பவரது வீட்டின் ஓடுகளையும் காட்டு யானைகள் உடைத்தது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தையும் உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து பல எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகள் முகாமிட்டுள்ள பகுதியை கண்டறிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினால் பொருட்சேதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சேதத்தையும் தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதில் அங்கு உம்மர் என்பவர் நடத்தி வந்த டீக்கடையை உடைத்த யானைகள் கடையில் இருந்த மாவுப் பொருட்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சேதப்படுத்தியது. கடையின் கட்டிடமும் சேதமடைந்தது.
இதே போல் அருகில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளி அன்புச் செழியன் என்பவரது வீட்டின் ஓடுகளையும் காட்டு யானைகள் உடைத்தது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தையும் உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து பல எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகள் முகாமிட்டுள்ள பகுதியை கண்டறிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினால் பொருட்சேதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சேதத்தையும் தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.