கோவை செட்டிபாளையத்தை அடுத்த பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு தீக்ஷா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீக்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது பெற்றோர் தீக்ஷாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தீக்ஷா இன்று காலை பேச்சு மூச்சின்றி காணப்பட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீக்ஷா மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தீக்ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.