சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 23 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பில் 100 வாகங்கள் பங்கேற்றன.

பொதுமக்களிடையே விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு அம்சங்கள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த அணிவகுப்பு நடத்தபடுவதாக இதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் தனியார் அமைப்பு மூலம் புற்று நோய் பாதித்த குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதுகுறித்து பேரணியை துவக்கி வைத்து பேசிய போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையில் விபத்துகள் குறைதுள்ளதாகவும் மக்களிடையே பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்', என தெரிவித்தார்.