ஜெம் மருத்துவமனை முதல் முறையாக தென்னிந்தியாவில் லேப்பிராஸ்கோப்பி மூலம் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை


ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் மெதந்தா இணைந்து முதல் முறையாக தென்னிந்தியாவில்  கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை லேப்பிராஸ்கோப்பி முறையில் செய்துள்ளது. ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை செய்தார். மெதந்தாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாயின் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 



கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் என்பவர் கல்லீரல் நோயால் 1 வருட காலமாக அவதிப்பட்டு வந்தார். இதில் அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அவரது மனைவி ஷீபா மூலமாக தனது வலது பக்க கல்லீரலை தானமாக வழங்கினார். எனவே அவருக்கு லேப்பிராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஷீபா 4-5 நாட்களில் குணமடைந்து விட்டார். அவரது கணவர் இன்னும் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினார். 

இது குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில்; வெளிநாடுகளில் 72-80 சதவீதம் வரை அதிக அளவில் உடலுறுப்பு தானம் மூலமாக லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இந்தவகையான உடலுறுப்பு தானத்தில் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு இரண்டு வகையாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றொன்று நெருங்கிய சொந்தங்கள் - வேறு பல காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களால் உறுப்பு தானம் செய்ய மேலை நாடுகள் போல் முன்வருவதில்லை. இதனால் இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தில் சொந்தபந்தங்கள் உறுப்பு தானம் அதிக அளவில் உள்ளது. கல்லீரல் தானம் செய்தால் 35-40 நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும் இத்தனித்தன்மை கல்லீரலுக்கு மட்டுமே உள்ளது. கல்லீரலை பெற்று கொண்டவர்களுக்கும் அக்கல்லீரல் 1-2 மாதங்களில் வளர்ந்து விடும். இதுபோன்ற கல்லீரல் தானம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தெனிந்தியாவில் ஜெம் மருத்துவமனை முதல் முறையாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...