கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு முகவரியற்ற கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால், தற்போது கோவை விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு உளவுத் துறையினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் ஏராளமானோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கோவை விமான நிலைய பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்கவும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.