கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவில். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் ஆண்டுதொரும் எந்நாளும் பக்தர்கள் ஏராளமானோர் வழிபடச் சென்று வருவர்.
குறிப்பாக தை மாதத் திருநாட்களில் பக்கதர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்தே காணப்படும்.

இவ்வருடம் தை மாதத் திருநாட்கள் நடைபெற்று வருவதாலும் இன்று விடுமுறை நாள் (ஞாயிறு) என்பதாலும் ஆயிரக்கணக்கான முருகன் பக்தர்கள் மருதமலையில் குவிந்துள்ளனர்.
வாகனங்களில் மருதமலை முருகன் கோவில் செல்வோர்கள் மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் வழியிலேயே மேலே சென்று கோவிலுக்கு சென்றுவிடுவர்.
அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்த நிலையில் மருதமைலை முருகன் கோவிலின் மேற்பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக, கார் உள்ளிட்ட வாகனமே அதிகமாக வந்துள்ளதால் மருதமலை முருகன் கோவிலின் அடிவாரத்தில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மருதலை கோவிலுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், தற்போது மேலே கோவிலுக்கு சென்றுள்ள வாகனங்கள் திரும்பி கீழே வந்தால் மட்டுமே கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள பக்தர்கள் மேல் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடியும்" என்றார்.