கனடாவில் பணிபுரிந்து வந்த சகோதரரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கனடாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தனது சகோதரர் மாயமாகி விட்டதாகவும், இந்திய வெளியுறவுத் துறை மூலம் தனது சகோதரனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை சூலூர் பகுதியை சேர்ந்த அவரது தங்கை மற்றும் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோத்தாஸ் சிங் தாலா. டெல்லியை சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருகின்றார்.

இவரது இளைய மகன் கார்த்திக் சவுத்ரி (25) மும்பையை சேர்ந்த ஆங்கிலோ ஈஸ்டன் என்ற கப்பல் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்.



இந்நிலையில் பணிநிமித்தமாக கனடா சென்ற கார்திக் சவுத்ரி மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் பேசிய கார்த்திக் சவுத்ரி அதன் பின்னர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சவுத்ரியின் தந்தை ரோத்தாஸ் சிங் மற்றும் அவரது சகோதரி மீனாட்சி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சவுத்தியின் சகோதரி மீனாட்சி, தனது சகோதரன் மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் தனது சகோதரன் குறித்து உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சகோதரன் பணிபுரிந்த நிறுவன ஊழியர்கள் திடீரென இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்பதாகவும் தெரிவித்த அவர், தனது சகோதரன் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே கனடாவில் மாயமான தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...