கோவை மாவட்டம், தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் சில்லரை மற்றும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர், வழக்கறிஞர் பிரிவு வீ.புஷ்பானந்தம் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள அனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், தடாகம் சாலையில் கோவில் மேடு பேருந்து நிலையிம் அருகில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில் மேடு, சிவாஜிகாலனி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் மற்றும் பெட்டிக் கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை மற்றும் திண்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
மேலும், இந்த பாக்கெட்டுகளில் எடை அளவு, தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனை அறியாமல் வாங்கி உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதனை தயார் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள அனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், தடாகம் சாலையில் கோவில் மேடு பேருந்து நிலையிம் அருகில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில் மேடு, சிவாஜிகாலனி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் மற்றும் பெட்டிக் கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை மற்றும் திண்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
மேலும், இந்த பாக்கெட்டுகளில் எடை அளவு, தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனை அறியாமல் வாங்கி உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதனை தயார் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.