சில்லரை மற்றும் மளிகை கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் சில்லரை மற்றும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர், வழக்கறிஞர் பிரிவு வீ.புஷ்பானந்தம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்துள்ள அனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் கோவில் மேடு பேருந்து நிலையிம் அருகில் வழக்கறிஞர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறேன். 

இந்நிலையில், தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோவில் மேடு, சிவாஜிகாலனி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகளில் மற்றும் பெட்டிக் கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை மற்றும் திண்பண்டங்களை பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும், இந்த பாக்கெட்டுகளில் எடை அளவு, தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனை அறியாமல் வாங்கி உண்ணும் போது வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இதனை தயார் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...