பட்டா வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் சமத்துவக் கழகம் மகளிர் அணி செயலாளர் சித்ரா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளாதி கிராமம் பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் சுமார் 4.22 ஏக்கரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 100 குடும்பம் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் பட்டா வழங்கக் கோரி பல முறை வலியுறுத்தி மனு அளித்தும், பல வழிகளில் முயற்சித்தும் பட்டா வழங்கவில்லை.

இப்பகுதியில் இருந்து சுமார் 60 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். பட்டா இல்லாததால் மின் விளக்கு இன்றி படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்டவை எதுவும் பட்டா இல்லாமல் செய்துகொடுக்க மறுக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய  நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...