கொங்குநாட்டு உணவுகளை சமைத்து அசத்திய கோவை சங்கரா கல்லூரி மாணவர்கள்


கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை சங்கரா கல்லூரியில் இன்று கொங்குநாட்டு சமையல் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.



சங்கரா கல்லூரியின் சமையல் கலை மற்றும விடுதி மேலாண்மை துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்போட்டியினை துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கொங்கு நாட்டின் உணவு வகைகளை சமைப்பதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியின் போது மாணவர்கள், கடலை லட்டு, கம்பு அல்வா, தங்கப்பால் அல்வா, இளநீர் பாயாசம், பேரிச்சை லட்டு, சிவப்பு அரிசி அல்வா, ராகி சாக்லேட் லட்டு உள்ளிட்ட பல உணவுகளை செய்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து, அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பெர்னார்ட் எட்வர்டு, சமையல் கலை மற்றும் விடுதி மேலாண்மை துறை சமையல் கலை நிபுணர் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் மாணவர்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சுவைத்துப்பார்த்து பரிசுப் பொருட்களை வழங்கினர்.



இதில், முதல் பரிசை தருன் என்னும் மாணவர் பெற்றார். இரண்டாம் பரிசை வித்யா மோள் என்பவரும், ராஜேஷ்வரன் என்னும் மாணவர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோவை விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டுத்தெரிவித்தனர்.

நிரைவாக துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்டு அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...