கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை சங்கரா கல்லூரியில் இன்று கொங்குநாட்டு சமையல் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.

சங்கரா கல்லூரியின் சமையல் கலை மற்றும விடுதி மேலாண்மை துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்போட்டியினை துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கொங்கு நாட்டின் உணவு வகைகளை சமைப்பதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியின் போது மாணவர்கள், கடலை லட்டு, கம்பு அல்வா, தங்கப்பால் அல்வா, இளநீர் பாயாசம், பேரிச்சை லட்டு, சிவப்பு அரிசி அல்வா, ராகி சாக்லேட் லட்டு உள்ளிட்ட பல உணவுகளை செய்து அசத்தினர்.

இதைத்தொடர்ந்து, அக்கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் பெர்னார்ட் எட்வர்டு, சமையல் கலை மற்றும் விடுதி மேலாண்மை துறை சமையல் கலை நிபுணர் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் மாணவர்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சுவைத்துப்பார்த்து பரிசுப் பொருட்களை வழங்கினர்.

இதில், முதல் பரிசை தருன் என்னும் மாணவர் பெற்றார். இரண்டாம் பரிசை வித்யா மோள் என்பவரும், ராஜேஷ்வரன் என்னும் மாணவர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோவை விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டுத்தெரிவித்தனர்.
நிரைவாக துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்டு அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.