சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நேற்று எம்டிஐ அந்நிய நேரடி முதலீடு என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் சங்கரா கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷணன் வரவேற்புரையாற்றினார். இதில், சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக் கழக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுமதி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கினை துவக்கி வைத்தார். விழா மலரினை கல்லூரியின் துணை இணை செயலர் நித்யா ராமச்சந்திரன், முனைவர் சுமதி, கல்லூரி முதல்வர், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சுரேஸ்பாபு ஆகியோர் கூட்டாக மலரினை வெளியிட்டனர்.
.jpg)
முதல் அமர்வில் புதுச்சேரி வணிகவியல் முதுகலை ஆராய்ச்சித்துறை முனைவர் எம்.கோச்சடை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரைகளை வாசித்தனர்.
இம்முதல் அமர்வு கருத்தரங்க நிகழ்வுகளை சங்கரா மேலாண்மைக் கல்லூரியின் துறைத்தலைவர் முனைவர் கௌரி தொகுத்து வழங்கினார். மூன்றாம் பகுதிகளை முனைவர் எஸ்.சிவசங்கரி மற்றும் அரசுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சிவஞானம் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இவ்வமர்வை முனைவர் உமா மற்றும் மோகன விக்னேஷ் தொகுத்தளித்தனர். இக்கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள பல நகரங்களிலிருந்தும் கோவையைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றம் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்க கட்டுரைகளை வாசித்தனர்.
விழாவின் நிறைவில் முனைவர் சிவஞானம் கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.