சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் அந்நிய நேரடி முதலீடு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது


சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நேற்று எம்டிஐ அந்நிய நேரடி முதலீடு என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

இக்கருத்தரங்கில் சங்கரா கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷணன் வரவேற்புரையாற்றினார். இதில், சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக் கழக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுமதி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கினை துவக்கி வைத்தார். விழா மலரினை கல்லூரியின் துணை இணை செயலர் நித்யா ராமச்சந்திரன், முனைவர் சுமதி, கல்லூரி முதல்வர், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சுரேஸ்பாபு ஆகியோர் கூட்டாக மலரினை வெளியிட்டனர்.



முதல் அமர்வில் புதுச்சேரி வணிகவியல் முதுகலை ஆராய்ச்சித்துறை முனைவர் எம்.கோச்சடை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கில் கட்டுரைகளை வாசித்தனர்.

 

இம்முதல் அமர்வு கருத்தரங்க நிகழ்வுகளை சங்கரா மேலாண்மைக் கல்லூரியின் துறைத்தலைவர் முனைவர் கௌரி தொகுத்து வழங்கினார். மூன்றாம் பகுதிகளை முனைவர் எஸ்.சிவசங்கரி மற்றும் அரசுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சிவஞானம் ஆகியோர் துவங்கி வைத்தனர். 

இவ்வமர்வை முனைவர் உமா மற்றும் மோகன விக்னேஷ் தொகுத்தளித்தனர். இக்கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள பல நகரங்களிலிருந்தும் கோவையைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றம் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்க கட்டுரைகளை வாசித்தனர். 

விழாவின் நிறைவில் முனைவர் சிவஞானம் கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...