கோவையில் வாடகைக் கார் சேவையினை அறிமுகம் செய்த ஜும்கார் நிறுவனம்


ஜும்கார் என்ற நிறுவனம் புதுமையான திட்டத்தில் வாடகை கார் சேவையினை கோவையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வாடகைக்கு கார் எடுக்கும்பொழுது மற்ற நிறுவனங்களில் காருடன் ஓட்டுநரையும் அனுப்புவதைப்போல் அல்லாமல் ஒரு சில நிபந்தனைகளுடன் தனி நபரே காரினை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.



இத்தியா முழுக்க இந்நிறுவனம் 2600 கார்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி க்ரேக் மொரன் கூறுகையில், கோவையில் எங்கள் சேவையினை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த சேவையின் மூலம் நகர மக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற முறையில் வாடகைக்கு கார் சேவையினை வழங்க உள்ளோம்.



இது கார் சொந்தமாக வைத்திருப்பதற்கு இது ஒரு மாற்றாக இருக்கும். இது மக்களின் தனிப்பட்ட பயணத் தேவைகள் குறித்தான ஒரு புதிய பார்வையை உருவாக்கும். இந்த சேவையினை அறிமுகம் செய்வதன் மூலம் தொழில்நுட்பம் எப்படி நமது நகரங்களை மாற்றும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாம் தற்பொழுது இந்த நாட்டில் அடிப்படையான ஒரு மாற்றத்தை நோக்கி பயணித்து வருகிறோம்' என்றார்.

மேலும் ஜும்கார் வீட்டிற்கே காரை அனுப்பும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளரின் இடத்திற்கே காரினை கொண்டுவந்து சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...