கோவை நாராயனகுரு கல்லூரியில் மகளிர் எம்பவர்மென்ட் மற்றும் மனித உரிமை கிளப் ஆகியவை இணைந்து கலரி குறித்தான ஒரு நாள் கருத்தரங்கை "கலரி ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்குமான ஒரு கலை" என்னும் தலைப்பில் நடத்தியது.
இக்கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணக்குமாரி வரவேற்புரை வழங்கினார். புதூர், பாலக்காடு கலரி பயிற்சி அளிக்கும் சிவிஎன் கலரி பள்ளியின் கலரி நிபுனர் சி.முரளிதரன் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.

இதில், மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பேனவும், தற்காத்துக்கொள்ளவும் பயிற்சிகள் அளித்தார்.
மனித உரிமை கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.ஆர்.நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.
இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர்.