வன விலங்குகளை தாக்க வேண்டாம் என நீலகிரி மக்களுக்கு வன அதிகாரிகள் வேண்டுகோள்



நீலகிரி மாவட்டம் குன்னூர் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சவுந்தரராஜன், பாபு, விக்ரம், மணிகன்டன் ஆகியோர் இன்று வனவிலங்குகளை தாக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது பொது மக்களுக்கு தண்டோரா மூலம் குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகளான கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை போன்றவற்றை விரட்டவோ, அவற்றை கற்கள், நெருப்பு மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கவோ கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் என்னும் பகுதியில் உள்ள மயானத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது.



மேலும், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் குன்னூர் பகுதியில் காட்டு எருமை தாக்கியதில் ஒருவர் பலியானார்.

இவ்வாறு குன்னூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகளின் தாக்குதலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதையொட்டி மனித- விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறையினர் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது வனத்துறையினர் காட்டு விலங்குகளை கண்டால் தாக்கக் கூடாது என அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...