விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி தீவிரம் : துணை ஆணையர் சரவணன் தகவல்


கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் பெருகி வரும் நிலையில், விபத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், விபத்துக்கள் நிகழ்வதை குறைக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரப்பகுதிகளில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், வேகத்தடை போன்றவைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது :- 

கோவை மாநகரில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் எவை?  என்று கண்டறிந்து அப்பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, அவினாசி சாலையில் மிக அதிக விபத்துகள் நடப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் சாலை ஓரங்களில் 'எச்சரிக்கை, விபத்துப்பகுதி' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பொருத்தப்பட்டு வருகிறது. 

மேலும், குறிச்சி பகுதியில் வேகத்தடைகள் மற்றும் சாலையின் நடுவே டிவைடர்கள் அமைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும். 

காவல் துறை சார்பில் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதோடு, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் விபத்துக்கள் வெகுவாக குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...