தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஆயுதப் படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் 2-ம் நிலைக் காவலர்கள் மற்றும் துணை தீயணைப்போர் பதவிகளுக்கு என 15664 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
மேற்படி பணியிடங்களில் 5 சதவிகிதம் முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிங்கள் வரும் பிப்ரவரி 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியான முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் உரிய நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கண்டு பயனடைய வேண்டும்.
மேலும், கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி உரிய முறையில் விண்ணப்பத்தினை முன்னாள் படை வீரர், அவர்களைச் சார்ந்தோர்கள் கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.