கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் கொங்குநாடு கால்நடை திருவிழா


வாணவராயர் அறக்கட்டளை, சங்கர் வானவராயர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் கலை, பாரம்பரியம், கட்டமைப்புகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து, பராமரித்து, பறைசாற்றும் அறப் பணிக்கானது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கவும் கொண்டாடவும், ‘கொங்குநாடு கால்நடை திருவிழாவை’ இவ்வறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

பண்டை காலம் முதலே நமது வாழ்வின் ஓர் அங்கமாக வீட்டு விலங்குகள் இருந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடை செல்வங்களின் பங்கு முக்கியமானது. 

தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த கொங்குநாடு கால்நடை திருவிழாவின் நோக்கமாகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக, சமத்தூர், பொள்ளாச்சியில், 2017 பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்க உள்ளன. 

வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த விழாவை காண 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விழா 108 கோமாதா பூஜையுடன் தொடங்கவிருக்கின்றது. இவ்விழாவுக்கான பதிவு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவ்வாண்டு கால்நடைக்கான போட்டிகளில் நாய் இனமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...