மத்திய பட்ஜெட்டில் 'சுகாதாரத் துறை' குறித்து மருத்துவர் ராஜேஸ் கண்ணா கருத்து!

நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை 'வெற்று' பட்ஜெட்டாகவே பார்பதாக கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார துறை குறித்த மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. சுகாதார துறைக்கு 28 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை உயர்வு, மருத்துவ செலவு, நோய்களின் தாக்கத்தை ஒப்பிடுகையில் மிக குறைவு".

நாட்டில் உள்ள 1.50 லட்சம் சுகாதார துணை நிலையங்களை தரம் உயர்த்தி, சுகாதார நலமையமாக உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு, உயிர் காக்கும் மருத்துங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகுறைப்பு வரவேற்கத்தக்கது. 

ஆனால், அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதியை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. 

அதேவேளை இவை அனைத்தும் கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் என்பதால் அந்த மையங்கள் அனைத்திலும் ஒரு பிசியோதெரபி மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாத பக்கவிளைவுகள் முற்றிலும் இல்லாத தரமான சிகிச்சைக்கு வழிவகை செய்யும்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் வேண்டும் என்பது எந்த அறிவிப்பும் இல்லை. பிசியோதெரபி மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும் என்பதை சிறிதும் செவி சாய்க்காமல் இத்தாண்டும் வந்துள்ள மத்திய பட்ஜெட்டை வெற்று பட்ஜெட்டாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்றும் என்ன நிலையில் உள்ளது என்பதை நினைத்து பார்க்கையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது கிராமபுற மாணவர்களின் மருத்துவர் கனவை பெரிதும் கேள்வி குறியாக்கியுள்ளது' என கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...