ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலைகளை மாநகராட்சி ஆணையர் (பொ) ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு சாலையில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில் "கோவை மாநகராட்சியில் 6 இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ். புரத்தில் டி.பி.சாலை மற்றும் திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை, சாய்பாபா காலனியில் என்.எஸ்.ஆர் சாலை, ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சாலை, சங்கனூர் மெயின் ரோடு, மசக்காளிப்பாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக ஆரம்பகட்ட செயலாக்கமாக ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு சாலை (1.8 கிலோ மீட்டர்) மற்றும் திருவேங்கடசாமி சாலை (1.2 கிலோ மீட்டர்)யில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த மாதிரி சாலைகள் கண்டுள்ள வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, சென்டர் மீடியன் ஆகியவை குறியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், இந்த மாதிரி சாலைகளில் புட் பாத், மின்சார ஒயர்களுக்கான டிரென்ச் மற்றும் டக்ட், பி.எஸ்.என்.எல், தனியார் வடங்கள், வீடுகளுக்கான குடிநீர் பைப், டிராபிக் ரெகுலேசன் தொடர்பான போலீஸ் கேபில் லைன்கள், தெரு விளக்குகள், உயர்மட்ட கோபுர விளக்குகள் ஆகியவை செல்வதற்கான தனியான பொது டக்ட் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங், சிறப்பு நவீன கழிப்பிட வசதி, நவீனமயமான குப்பைத்தொட்டிகள், புதிய மரங்கள் நடுதல், சிறப்பு மாதிரி சாலைகளை ஒட்டி தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், சிறப்பு மருத்துவ உதவி மையம், ஜியோ டாகிங், ஒய்பை வசதி, வாகனத்தின் வேகங்களை கண்டறியும் கருவி, குடிநீர் வசதி, சுற்றுப்புற மாசு கண்டறியும் கருவி, அனைத்து வசதிகள் கூடிய ஸ்மார்ட் போல்ஸ், சாலைகளை கடக்கும் நடைபாதை வசதி, குறிப்பிட்ட இடவெளியில் மழைநீர் சேகரிக்கும் சிறப்பு ஆழ்துளைக் கிணறு அமைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் ஆகிய வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்டப் பணிகளான மாதிரி சாலைகளான ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி சாலைகளில் குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் தியாகராஜன், ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...