பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாரதியார் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம்


பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறையின் சார்பாக பல்கலைக்கழக மாணியக்குழு நிதியுதவியுடன் “பெண்கள் மற்றும் மனித உரிமைகள் - ஒரு சர்வதேச முன்னோக்கு” என்ற சர்வதேச கருத்தரங்கமானது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 



இக்கருத்தரங்கில் அமெரிக்க ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் முனைவர். சூசன் எம் சாவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் தனது உறையில் தற்போதும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக சமூகபணியின் துறைத்தலைவர் முனைவர். கே.ஆர்.முருகன், அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் 15 ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துறைத்தார். 

இந்நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மைய இயக்குநர் மினி மெத்திவ்,  பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநனர் முனைவர்.ஜெனிட்டா ரோசலின் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...