மது மற்றும் கள்ளச்சாராயம் குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.02.2017) தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட கலால் துறை மூலம் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி காவல் ஆணையர் அலுவலகம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. 

இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளச்சாராய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடியும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்றனர். 

முன்னதாக கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர், வ.உ.சி மைதானத்தில் மாணவ மாணவியர்களுக்கு மதுவினால் உடலில் உண்டாகும் தீமைகள் குறித்தும் மருத்துவர்களால் விளக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன், மாவட்டட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) நூர்முகம்மது, கோட்ட கலால் அலுவலர்கள் ஜெயசித்ரா, ருக்மணி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...