கோவையில் தீபாவின் ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சியை துவக்கினர்.
தமிழகம் முழுவதும் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவையில் தீபா ஆதரவாளர்கள் இணைந்து அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவானந்தாகாலணி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைபாளர் ஜெயபால் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்காக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த கூட்டங்களில் பங்கெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்த தகவல்கள் அனைத்தும் தீபாவுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் பன்னீர் செல்வம் அப்போது கூறினார்.