ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

விழாக்காலம், விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் 100, 8190000100, 0422 2303390 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


கோவை: சமீபகாலமாக விழாக்கள், விடுமுறை நாள் என்றவுடன் யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ ஆம்னி பேருந்து நிர்வாகத்தாருக்கு பெரும் கொண்டாட்டம் தான். ஏனென்றால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வது போல, விழாக்கள் மற்றும் விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல அதிக அளவிலான பொதுமக்கள் பேருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் கொண்டாட்டத்துக்கு தயாரானாலும் அவர்கள் ஊருக்கு செல்லும் போது திண்டாட்டத்தில் மாட்டிக் கொள்கின்றனர். குறிப்பாக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் அரங்கேற்றும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது.

அதுவும் விழாக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்து வசூல் செய்யப்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் முன்னதாக புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைனிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கூடுதலான கட்டணத்தை வசூல் செய்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் 100, 8190000100, 0422 2303390 போன்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும், மாநகர காவல்துறையின் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் புகார் தெரிவிக்கலாம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...