கோவை மாவட்டம், சிங்காநல்லூர் சரகத்திற்குட்பட்ட ராமானுஜம் நகரில் கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதியன்று ஒரு வீட்டில் காவல்துறை போல் உடை அணிந்து, வருவாய் துறை அதிகாரிகள் போல் சென்று 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரூபாயும் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முகமது ரிஸ்வான் (29), கிருஷ்ணன் என்னும் முத்துகிருஷ்ணன் (46), பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (39), சலீம் (40), லோகநாதன் (40) ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில், முகமது ரிஸ்வான், கிருஷ்ணன் (எ) முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கடந்த 2017 ஜனரி 31ம் தேதியன்றும் மேலும், பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சலீம், லோகநாதன் ஆகிய மூவரும் 2.2.2017 அன்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.