இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.


கோவை: இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மையான மொழியாக்க முயன்றுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது பேசிய மாணவர் சங்கத்தினர் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மை மொழியாக ஆக்கியுள்ளனர். இதனால் பிற மாநில மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.

அனைத்து மொழியையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும். இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்கிறோம், அதே போல உயர் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...