கோவையில் முதல் முறையாக‌ 'Lantern Festival' ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவும் - மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

கோவை ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ தீபாவளி பண்டிகையையொட்டி “Sky Lantern Festival” என்னும்‌ நிகழ்ச்சியை வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: கோவையில் முதல் முறையாக‌ ஸ்மாட்‌ சிட்டி லிமிடெட்‌ “Sky Lantern Festival” என்னும் நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி வாலாங்குளம்‌ மேம்பாலத்தின் கீழ்‌ 22.10.2022 அன்று மாலை 6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது.

"Sky Lantern Festival” என்பது வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்பும் நிகழ்வாகும். கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி லிமிடெட்‌ முதல் முறையாக இதை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் வான்‌ விளக்கு திருவிழா, வானவேடிக்கை, பாடல்‌ நிகழ்ச்சி மற்றும்‌ உணவு வகைகளும்‌ இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு, வான்‌ விளக்குகளை ஏற்றி வான்‌ நோக்கி அனுப்ப விரும்புவோர்கள்‌ 7904163689/ 9566383542 என்ற எண்களில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்‌ என சிறப்பு தகவலாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...