தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்க முயன்ற அசாம் இளைஞர் கைது…!

கோவை தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணியின் போது, இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்க முயன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொண்டாமுத்தூர் போலீஸார் தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்ட போது, தொண்டாமுத்தூர் அருகே சாலை ஓரத்தில் சந்தேகத்திடமாக நின்றுகொண்டிருந்த வட மாநில இளைஞரை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஃபைசுல் இஸ்லாம் (21) என்பதும், கோவையில் தங்கி பணியாற்ற வந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...