தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்க முயன்ற அசாம் இளைஞர் கைது…!

கோவை தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணியின் போது, இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்க முயன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொண்டாமுத்தூர் போலீஸார் தொண்டாமுத்தூர் – பூலுவப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்ட போது, தொண்டாமுத்தூர் அருகே சாலை ஓரத்தில் சந்தேகத்திடமாக நின்றுகொண்டிருந்த வட மாநில இளைஞரை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஃபைசுல் இஸ்லாம் (21) என்பதும், கோவையில் தங்கி பணியாற்ற வந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...