கோவையில் இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது

நம்.4 வீரபாண்டி அருகே மணிமேகலை என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.



கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி மணிமேகலை (26). நிறைமாத கர்ப்பினியான மணிமேகலைக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காரமடை ஆம்புலன்சில் மணிமேகலையை அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு குழந்தை வெளியே வர துவங்கியதால், ஆம்புலன்சில் இருந்த மருத்துவரே பிரசவம் பார்த்துள்ளார்.

மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு, உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கிலி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர். இதில் மணிமேகலைக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இருவரும் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருவரையும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...