கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 100-வது வார்டுக்குட்பட்ட போத்தனூர், மேட்டூர் பகுதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடவீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றிவருவதை கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வைட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, 96-வது வார்டுக்குட்பட்ட குறிச்சி சுந்தராபுரம், காந்திஜி சாலை பகுதியிலுள்ள உழவர் சந்தையை ப.காந்திமதி ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், மண்டல துப்புரவு அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.