தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.

தீபாவளி முடிந்து மறுநாள் புறப்படும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், தீபாவளிக்கு மறுநாளான அக்.25ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்ககோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

இக்கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து வெளியூருக்கும் வெளியூரிலிருந்து சென்னைக்கும் பல தரப்பு மக்கள் பயணம் செய்ய உள்ளனர்.

கூட்ட நெரிசல் இன்றி எளிமையாகவும் இனிமையாகவும் பயணம் செய்ய பல்வேறு சிறப்பு பேருந்துகளை தங்களின் வழிகாட்டுதல்படி போக்குவரத்துத்துறை அறிவித்தமைக்கு நன்றி.

இந்த வேளையில் கொண்டாட்டம் முடித்து மீண்டும் அவரவர் இருப்பிடங்களுக்கு ஒரு சேர அனைவரும் திரும்பும் பொழுது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தீபாவளி தினத்திற்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பின்னொரு நாளில் ஈடுசெய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது விடுமுறையாக அறிவித்து உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...