கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் கொங்குநாடு கால்நடை திருவிழா பொள்ளாச்சியில் துவக்கம்


வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் 'கொங்குநாடு கால்நடை திருவிழா' பொள்ளாச்சியில் துவக்கம்.



இவ்விழாவின் நோக்கம் தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக பொள்ளாச்சி சமத்தூரில் இன்று துவங்கிய இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 108 கோமாதாக்களை கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



மேலும், இதில் வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதைத்தொடர்ந்து, கொங்குநாடு கால்நடை திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கால்நடைகளுக்கான தீவனம், விவசாயப் பொருட்கள், கால்நடைகளுக்கு என சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.



Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...