கோவை காவலர் பள்ளி வளாகத்தில் பாரா சைலிங்கில் பறந்த டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையாளர் சிலம்பரசன்

காவலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பறந்தனர்.



கோவை: கோவை காவலர் பள்ளி வளாகத்தில், தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி வழங்கப்பட்டது.



இதற்காக தகுந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தயார் செய்த போது, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங்கில் பறந்து அசத்தினார்.



இந்நிலையில் இன்று என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி துவங்கிய நிலையில் அங்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பங்கேற்றனர்.



முன்னதாக அவர்களுக்கு பாரா சைலிங் குறித்தான விதிமுறை மற்றும் எவ்வாறு கீழே இறங்க வேண்டும் என்ற வழிமுறைகள் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் பாரா சைலிங்கில் பறந்தனர். அதனை தொடர்ந்து என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...