வால்பாறை தேயிலை தோட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த ட்ராக்டர் - வடமாநில தொழிலாளி படுகாயங்களுடன் மீட்பு

கோவை வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக வந்த ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மலை பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளி காட்டு பகுதியில் இருந்து மீட்கபட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.



கோவை: வால்பாறை அருகே மானிக்கா எஸ்டேட் பகுதியில் காலை 8 மணி அளவில் தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் வந்துள்ளனர்.

அவர்கள் மருந்தை எடுத்து கொண்டு 38 ம் நம்பர் தோட்டத்திற்கு சென்று உள்ளனர். டிராக்டரை வட மாநில தொழிலாளி சஞ்சய் இயக்கியதாக கூறப்படுகிறது. மலைப்பாதையில் செல்லும் பொழுது ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மலை பாதையில் இருந்ந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.



இதில் வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகியவர்கள் பலத்த காயங்களுடன் காட்டிற்குள் விழுந்தனர். டிராக்டர் மலையில் விழுந்ததில் சுக்குநூறாக உடைந்துள்ளது.



தேயிலை தோட்டத்தில் வேலைக்கு வந்தவர்கள் டிராக்டர் விழுந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முருகன் என்பவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் டிராக்டர் இயக்கிய சஞ்சய் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...