குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் மெட்ரெகான் எனும் பெயரில் 17வது ஆண்டு தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் வரும் நாளை சனிக்கிழமை 4ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மருத்து பதிவேட்டு துறையின் தலைவர் தெய்வசீலி கிருபாகரன் கூறியதாவது, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவிலான மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கி உள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் 60 ஆயிரம் உள்நோயாளிகள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2005ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கியதன் மூலம் அதிக அளவிலான காகிதங்களை சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு சிறப்பான சேவை செய்ய இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி சர்வதேச நோய்களின் வகைப்பாடு 10 முறைப்படி மருத்துவ பதிவேடு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. மெமரி சிப் மூலம் நோயாளிகளின் முழு மருத்துவ தகவல்களும் பெயர் வரிசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு, இந்தியாவில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர் என்றார்.
இதுகுறித்து மருத்து பதிவேட்டு துறையின் தலைவர் தெய்வசீலி கிருபாகரன் கூறியதாவது, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவிலான மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கி உள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் 60 ஆயிரம் உள்நோயாளிகள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2005ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கியதன் மூலம் அதிக அளவிலான காகிதங்களை சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு சிறப்பான சேவை செய்ய இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி சர்வதேச நோய்களின் வகைப்பாடு 10 முறைப்படி மருத்துவ பதிவேடு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. மெமரி சிப் மூலம் நோயாளிகளின் முழு மருத்துவ தகவல்களும் பெயர் வரிசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு, இந்தியாவில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர் என்றார்.