வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி - கோவை தம்பதியினர் கேரளாவில் கைது

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.59 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கோவை தம்பதியினர் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் கைது.


கோவை: கோவையை சேர்ந்த தன்யா மற்றும் கருணாநிதி தம்பதிகள் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ.59 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதனால் பணம் இழந்தவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் கொடுக்கபட்ட புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில் அவர்கள் மீது கேரளா எர்ணாகுளம் காவல் நிலையம், மதுரை மாவட்டம், மற்றும் கோவையிலும் அவர்கள் பெயரில் மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது வந்தது.

மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி தனிப்படை அமைத்து இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேறு ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை அழைத்து வந்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...